ஆப்நகரம்

16 மாதங்கள் அணியில் நீடிக்க வைத்து, தோனிக்கு ஆதரவளித்த கோலி; கங்குலி பாராட்டு!

புதுடெல்லி: தோனி விஷயத்தில் கோலியின் செயல்பாடு குறித்து, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Jan 2019, 2:39 am
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. இந்திய அணியின் வெற்றிக்கும், தொடரை வெல்ல உறுதுணையாக இருந்ததற்கும் தோனிக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.
Samayam Tamil Dhoni.


கடந்த ஆண்டு முழுவதும் மோசமான ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தி வந்தார். இதனால் அவரது ஓய்வு குறித்து சர்ச்சைகள் எழுத் தொடங்கின. 2018ல் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெறும் 275 ரன்கள் மட்டுமே தோனி எடுத்திருந்தார்.

இதுவே ஒட்டுமொத்த சராசரியில் மிக மோசமான ஆண்டாகும். இதனால் கடும் விமர்சனங்களை தோனி எதிர்கொள்ள நேரிட்டது. இந்நிலையில் நடப்பாண்டு சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார்.

தோனியை சுமார் 16 மாதங்கள் அணியில் தக்க வைத்ததற்கு கேப்டன் கோலி தான் காரணம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டியுள்ளார். மேலும் கூறுகையில், இரு வீரர்களும் அணியில் நீண்ட நாட்கள் விளையாடியுள்ளனர்.

தற்போதைய நிலையில் அணியில் தோனி தான் சீனியர். கடந்த ஆண்டு நெருக்கடியில் தோனி சிக்கிய போது, கோலி ஆதரவளித்தார். இதுபோன்று ஒருசில கேப்டன்களே நடந்து கொள்வர்.

தோனியை நீக்காமல் இருந்ததற்கு கோலியை பாராட்டுகிறேன். இதுவே சிறந்த அணி உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமையும் என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்