ஆப்நகரம்

இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்: கில்கிறிஸ்ட்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான படுதோல்விக்கு இந்திய கேப்டன் கோலியின் தவறான முடிவு தான் காரணம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

TOI Sports 19 Jun 2017, 6:38 pm
லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான படுதோல்விக்கு இந்திய கேப்டன் கோலியின் தவறான முடிவு தான் காரணம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kohli is inspirational and the right man to lead says adam gilchrist
இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்: கில்கிறிஸ்ட்!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் லண்டனில் நடந்த பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானிடம் இதுவரை இல்லாத அளவு படுமோசமான தோல்வியை சந்தித்தது.

இதில் இந்திய அணி ‘டாஸ்’ வென்றவுடன் ‘பேட்டிங்’கிற்கு சாதகமான ஓவல் மைதானத்தில் பவுலிங்கை தேர்வு செய்து மிகப்பெரிய மடத்தனம் செய்ததாக, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில்,’விராட் கோலி ஒரு சிறந்த தலைவர். பொறுப்புக்களை விரும்பி ஏற்றுக்கொள்ளும் தைரியசாலி. அவர் இந்திய அணியை வழிநடத்த மிகச்சரியான ஆள் தான். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பைனலில் அவரின் முடிவு மிகவும் மட்டமாக இருந்தது. இது போன்ற முக்கியமான போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியாக இருந்தால், எப்போதும், முதலில் ‘பேட்டிங்’ செய்யவே முடிவு செய்யும். ‘ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்