ஆப்நகரம்

இந்திய அணியில் இல்லாத குர்ணால் பாண்டியாவுக்கு கொட்டி கொடுத்த மும்பை

இந்தாண்டு நடைப்பெற உள்ள ஐபிஎல் 11வது சீசனுக்கான அணி வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு பெங்களூருவில் நடைப்பெற்று வருகிறது.

Samayam Tamil 28 Jan 2018, 6:57 am
பெங்களூரு : இந்தாண்டு நடைப்பெற உள்ள ஐபிஎல் 11வது சீசனுக்கான அணி வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு பெங்களூருவில் நடைப்பெற்று வருகிறது.
Samayam Tamil krunal pandya becomes most expensive uncapped player in ipl
இந்திய அணியில் இல்லாத குர்ணால் பாண்டியாவுக்கு கொட்டி கொடுத்த மும்பை


ஜனவரி 27,28 ஆகிய இரண்டு தினங்களில் ஐபிஎல் வீரர் ஏலம் நடைப்பெறுகின்றது. எட்டு அணிகள் இடம்பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் மிகவும் போட்டி போட்டு வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவராக அனைவரையும் வியக்க வைத்துள்ளார் குர்ணால் பாண்டியா.

இதுவரை இந்திய அணியில் இடம்பெறாத குர்ணால் பாண்டியாவுக்கு ரூ. 8.8 கோடி கொடுத்து அணியில் எடுக்கப்பட்டுள்ளது.

சாதனை விலை:
இதுவரை இந்திய அணியில் ஒருமுறைகூட விளையாடாத ஒரு வீரருக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுத்து எடுக்கப்பட்டது இதுவே முதன் முறை. முன்னதாக பவன் நெகி ரூ. 8.5 கோடிக்கு பெங்களூரு அணி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்