ஆப்நகரம்

Ind vs Sl: இந்திய வீரருக்கு கொரோனா…இரண்டாவது டி20 போட்டி ஒத்திவைப்பு!

இந்தியா, இலங்கை இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Jul 2021, 4:52 pm
இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, ஐபிஎலில் சிறப்பாக சோபித்த இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
Samayam Tamil இந்திய அணி


தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 164 ரன்கள் அடித்த நிலையில், அடுத்துக் களமிறங்கிய இலங்கை அணி 126 ரன்கள் மட்டும் அடித்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா அட்டாக்:

இந்நிலையில் இந்திய அணி வீரர் க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மொத்தம் 8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இரண்டாவது டி20 போட்டி ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி நாளை நடைபெறும்.

ஒருவேளை மற்ற வீரர்களுக்கும் கொரோனா உறுதியாகும் பட்சத்தில், இந்த டி20 தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்