ஆப்நகரம்

குழப்ப தர்மசேனா தேவைதானா ?

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்டில், அம்பயர் தர்மசேனாவின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TOI Sports 18 Nov 2016, 5:35 pm
விசாகப்பட்டினம்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்டில், அம்பயர் தர்மசேனாவின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil kumar dharmasena comes under the scanner again as two quick dismissals leave india stunned
குழப்ப தர்மசேனா தேவைதானா ?


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இருஅணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில் முதலில் ‘பேட்டிங்’ செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 455 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது’.

முதல் நாளில் 4 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் வெறும் 138 ரன்கள் மட்டும் சேர்த்து 6 விக்கெட்டை பறிகொடுத்தது. இதற்கு அம்பயர் தர்மசேனாவின் குழப்பான முடிவும் காரணமாக பார்க்கப்படுகிறது. இவர் முதலில் சகாவின் விக்கெட்டின் போது பவுலர் அவுட் கேட்டவுடன், முதலில் மவுனம் சாதித்த தர்மசேனா, பின் நீண்ட இடைவேளைக்கு பின் அவுட் கொடுத்தார்.

இதனால் சந்தேகமடைந்த சகா, இதை ரிவியூ செய்ய அதிர்ஷ்டவசமாக தர்மசேனாவிற்கு முடிவு சாதகமாக அமைந்தது. பின் ரவிந்திர ஜடேஜாவின் விக்கெட்டின் போதும், தர்மசேனா, சற்றும் சிந்திக்காமல் பவுலர் அவுட் கேட்டவுடன் விரலை உயர்த்தினார். ஆனால் ஜடேஜா ரிவியூ செய்யாததால், தர்மசேனாவின் தவறான முடிவு தெரியாமல் போனது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்