ஆப்நகரம்

“இருந்தாலும் நீ அப்படி பண்ணியிருக்கக்கூடாது” : ஜடேஜாவை அசிங்கப்படுத்தும் சங்ககரா!

சாம்பியன் டிராபி பைனலில் பாண்டியாவிற்காக, ஜடேஜா தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்திருக்க வேண்டுமென இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககரா கருத்து தெரிவித்துள்ளார்.

TOI Contributor 20 Jun 2017, 8:34 am
சாம்பியன் டிராபி பைனலில் பாண்டியாவிற்காக, ஜடேஜா தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்திருக்க வேண்டுமென இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககரா கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kumar sangakkara about ravindra jadeja on pandya run out
“இருந்தாலும் நீ அப்படி பண்ணியிருக்கக்கூடாது” : ஜடேஜாவை அசிங்கப்படுத்தும் சங்ககரா!


சாம்பியன் டிராபி போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜாவின் செயலை, இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககரா விமர்சனம் செய்துள்ளார். ரவீந்திர ஜடேஜா விளையாடிக்கொண்டிருந்த போது மறுமுனையில் ஹர்திக் பாண்டியா நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார். 6 சிக்ஸ், 4 பவுண்டரி என 76 ரன்கள் அடித்திருந்தார்.

அப்போது ஹசன் அலி பந்து வீச்சை எதிர்கொண்ட ஜடேஜா, சிங்கிள் எடுப்பதை போல் ஓடி பின்னர் கிரீஸூக்கே சென்றுவிட்டார். ஜடேஜாவை நம்பி ஓடிவந்த பாண்டியா அவுட்டானார். ஓடத்தொடங்கிய ஜடேஜா மறுமுனைக்கு ஓடியிருந்தால் பாண்டியா ரன் அவுட்டில் இருந்து தப்பித்திருக்கலாம். நல்ல ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்த பாண்டியா வீணாக அவுட் ஆனார்.

ஜடேஜாவின் இந்த செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் சங்ககரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாண்டியா நன்றாக விளையாடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஜடேஜா தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஜடேஜா சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்