ஆப்நகரம்

பவுலர்களிடம் பம்மிய பஞ்சாப்: பெங்களூருக்கு 139 ரன்கள் இலக்கு!

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், பஞ்சாப் அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது.

TOI Sports 5 May 2017, 9:37 pm
பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், பஞ்சாப் அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது.
Samayam Tamil kxip set 139 as target for rcb
பவுலர்களிடம் பம்மிய பஞ்சாப்: பெங்களூருக்கு 139 ரன்கள் இலக்கு!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் 43வது லீக் போட்டியில், பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதில் பெங்களூரு அணியில், கிறிஸ் கெயில், சாமுவேல் பத்ரி அணிக்கு திரும்பினர். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

சொதப்பல் ஆரம்பம்:
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆல்மா (1), கப்டில் (9) சொதப்பல் துவக்கம் அளித்தனர். பின் வந்த மார்ஷ் (20), வோஹ்ரா (25) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.

மேக்ஸ்வெல் ஏமாற்றம்:
தொடர்ந்து வந்த கேப்டன் மேக்ஸ்வெல் (6) வழக்கமான அவசரகதியில் வெளியேறினார். சகா (21) நிலைக்கவில்லை. பின் வரிசை வீரர்களும் சோபிக்க தவற, பஞ்சாப் அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணி சார்பில், சகால், சவுத்திரி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

RCB won the toss and choose to bowl first against KXIP

அடுத்த செய்தி

டிரெண்டிங்