ஆப்நகரம்

புஜாரா, விஜய் சதத்தால் வலுவான நிலையில் இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முரளி விஜய், புஜாரா ஆகியோர் சதம் அடித்ததால், இந்திய அணி, வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகிறது.

TOI Sports 11 Nov 2016, 5:30 pm
ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முரளி விஜய், புஜாரா ஆகியோர் சதம் அடித்ததால், இந்திய அணி, வலுவான நிலையை நோக்கி முன்னேறி வருகிறது.
Samayam Tamil late strike shifts momentum in engs favour
புஜாரா, விஜய் சதத்தால் வலுவான நிலையில் இந்தியா


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில், 537 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேரமுடிவில், இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது.

இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு, கம்பிர் (29) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. இதன்பின் களமிறங்கிய உள்ளூர் வீரரான புஜாரா, ஒவ்வொரு ரன் அடித்த போதும், ரசிகர்கள் ஆக்ரோஷமாக உற்சாகப்படுத்தினர். மறுமுனையில் விஜய் சிறப்பாக விளையாடி சிறந்த பார்ட்னர் சிப் அமைத்தனர்.

புஜாரா, விஜய் அடுத்தடுத்து சதம் விளாசினர். இந்நிலையில் புஜாரா 124 ரன்கள் எடுத்திருந்த பொழுது ஸ்டோக் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின் விஜயுடன் கேப்டன் கோலி இணைந்தார்.

விஜயின் இடது கால்தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் ரன் எடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். இந்நிலையில் 126 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அன்சாரி பந்தில் அவுட்டாகினார்.

இதன்பின் 3ம் நாள் ஆட்டம் முடியும் நாள் என்பதால் நைட் வாட்ச்மேனாக அமித் மிஸ்ரா களமிறங்கினார். ஆனால் மிஸ்ரா அன்சாரியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 2வது பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார்.

3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4விக்கெட்டுகளுக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 26 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்