புதுடில்லி: ஐ.பி..எல்., தலையெழுத்தை பி.சி.சி.ஐ., உறுப்பினர்களே தீர்மானிக்கட்டும் என அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்., தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் சூதாட்டம் ஏகபோகமாக நடப்பது வழக்கமாகி வருகிறது. இதனால் சீர்திருத்தம் தேவை என நீதிபதி லோதா குழு , பி.சி.சி.ஐ.,க்கு கொடுத்த நெருக்கடி காரணமாக தற்போது இருவருக்கும் இடையே பனிப்போர் நடக்கிறது.
சர்வதேச போட்டிகளை நடத்துவதிலே தற்போது சிக்கல் நிலவுவதால், உள்ளூர் தொடரான ஐ.பி.எல்., போட்டிகளின் தலையெழுத்தை தனது உறுப்பினர்களின் கையில் ஒப்படைப்பதாக பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உறுப்பினர்களுக்கு தாகூர் எழுதியுள்ள கடிதத்தில்,’ கடந்த 9 ஆண்டுகளாக ஐ.பி.எல்., மூலம் கிடைத்த ஒட்டு மொத்த ரூ. 2,406 கோடிகள். இதில் ரூ. 110 கோடியை முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கியுள்ளோம். தவிர, 2015ல் இந்திய பொருளாதாரத்தின் நிலையில் ஐ.பி.எல்., முக்கிய பங்குவகித்தது. தவிர, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இனி இதுகுறித்த முடிவை உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும்.’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்., தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதில் சூதாட்டம் ஏகபோகமாக நடப்பது வழக்கமாகி வருகிறது. இதனால் சீர்திருத்தம் தேவை என நீதிபதி லோதா குழு , பி.சி.சி.ஐ.,க்கு கொடுத்த நெருக்கடி காரணமாக தற்போது இருவருக்கும் இடையே பனிப்போர் நடக்கிறது.
சர்வதேச போட்டிகளை நடத்துவதிலே தற்போது சிக்கல் நிலவுவதால், உள்ளூர் தொடரான ஐ.பி.எல்., போட்டிகளின் தலையெழுத்தை தனது உறுப்பினர்களின் கையில் ஒப்படைப்பதாக பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உறுப்பினர்களுக்கு தாகூர் எழுதியுள்ள கடிதத்தில்,’ கடந்த 9 ஆண்டுகளாக ஐ.பி.எல்., மூலம் கிடைத்த ஒட்டு மொத்த ரூ. 2,406 கோடிகள். இதில் ரூ. 110 கோடியை முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கியுள்ளோம். தவிர, 2015ல் இந்திய பொருளாதாரத்தின் நிலையில் ஐ.பி.எல்., முக்கிய பங்குவகித்தது. தவிர, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இனி இதுகுறித்த முடிவை உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும்.’ என அதில் குறிப்பிட்டிருந்தார்.