ஆப்நகரம்

’தல’ தோனி தலையெழுத்தை இவங்ககிட்ட விடுறது தான் 'பெஸ்ட்’: கபில் தேவ்!

‘தோனியின் டி-20 எதிர்காலத்தை இந்திய தேர்வுக்குழுவினரிடம் விடுவது தான் சிறந்தது’ என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

TOI Sports 18 Nov 2017, 7:48 pm
ஐதராபாத்: ‘தோனியின் டி-20 எதிர்காலத்தை இந்திய தேர்வுக்குழுவினரிடம் விடுவது தான் சிறந்தது’ என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil let selectors decide dhonis future in t20s kapil dev
’தல’ தோனி தலையெழுத்தை இவங்ககிட்ட விடுறது தான் 'பெஸ்ட்’: கபில் தேவ்!


இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி,36. இவர், இந்திய கிரிக்கெட் அணிக்கு சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை (50 ஓவர்) வென்று கொடுத்தார். தவிர் , டி-20 (2007), மினி உலகக்கோப்பை (2013) வென்று கொடுத்தார்.

இந்நிலையில் இவரின் ஆட்டம் குறித்து சமீபத்தில் பெரும் சர்ச்சையே எழுந்தது. அதில் சிலர் இவருக்கு ஆதரவாக பேசினாலும், பெரும்பாலும் தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்தே அதிகம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில்,’ தனது வாழ்நாள் முழுதும் யாராலும் கிரிக்கெட் விளையாட முடியாது. ஆனால் தற்போது தோனி சிறப்பாக விளையாடிக்கொண்டுள்ளார். அதனால் அவரின் டி-20 எதிர்காலத்தை தேர்வுக்குழுவினரிடம் விட்டுவிடுவதே முறையாகும். இதில் எனது கருத்து மக்கள் மனதில் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதனால் நான் எதுவும் கூறவிரும்பவில்லை.

HYDERABAD: Veteran cricketer Kapil Dev said the topic of wicketkeeper-batsman MS Dhoni's future in T20s is better left to the selectors.

அடுத்த செய்தி

டிரெண்டிங்