ஆப்நகரம்

டிஎன்பிஎல்: காரைக்குடியை கண்டமாக்கிய கோவை கிங்ஸ்

இரண்டவாது டிஎன்பில் கிரிக்கெட் தொடரில் கோவை அணி காரைக்குடி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

TNN 24 Jul 2017, 2:38 am
இரண்டவாது டிஎன்பில் கிரிக்கெட் தொடரில் கோவை அணி காரைக்குடி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
Samayam Tamil lyca kovai kings won by 6 wkts vs karaikudi kaalai
டிஎன்பிஎல்: காரைக்குடியை கண்டமாக்கிய கோவை கிங்ஸ்


டிஎன்பில் எனப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இன்றைய ஆட்டத்தில் காரைக்குடி மற்றும் கோவை அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அனிருத்தா 52 ரன்களும் கேப்டன் பத்ரிநாத் 41 ரன்களும் அடித்தனர்.

159 ரன்களை சேஸ் செய்த கோவை அணிக்கு தொடக்க வீரர்களான அனிருத் சீதா ராம் மற்றும் சூர்யப்பிரகாஷ் ஆகியோர் அருமையான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். சீதா ராம் 45 ரன்னிலும் சூர்யப்பிரகாஷ் 60 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஜே.எஸ்.முகமது மற்றும் ரவி குமார் ரோஹித் ஆகியோர் நிதனாமாக ஆடி வெற்றியை உறுதி செய்தனர்.

இறுதியில் காரைக்குடி அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

கோவை அணிக்கு அதிரடி துவக்கம் அளித்த சூர்யப்பிரகாஷ் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்