ஆப்நகரம்

முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் கைப்பற்றிய ரவி யாதவ்... ரஞ்சிக்கோப்பையில் புது வரலாறு!

மத்திய பிரதேச கி1ரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்ச்சாளர் ரவி யாதவ், ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி வரலாறு படைத்தார்.

Samayam Tamil 28 Jan 2020, 5:06 pm
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதாண்டுக்கான தொடர் நாட்டின் பல்வேறு பகுதியில் நடக்கிறது. இதில் இந்தூரில் நடக்கும் ஏழாவது லீக் சுற்று போட்டியில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேச அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் மத்திர பிரதேச அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் ரவி யாதவ் அறிமுக வீரராக களமிறங்கினார்.
Samayam Tamil ravi_yadav_hattrick


வரலாறு
இவர் தனது அறிமுக போட்டியில் வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றிலேயே அறிமுக போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற வரலாறு படைத்து அசத்தினார் ரவி யாதவ். உத்தரபிரதேசத்தை யாதவ் சீனியர் ரஞ்சிக்கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்காத காரணத்தால், மத்திய பிரதேச அணிக்காக முதல் தர போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார்.


இவர்களும்
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அறிமுக போட்டியில் ஜவஹல் ஸ்ரீநாத், அபிமன்யு மிதுன் ஆகியோரும் தங்களின் அறிமுக போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினாலும், ரவி யாதவ் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற வரலாறு படைத்தார். முன்னதாக முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 230 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய உத்தரபிரதேச அணி, முதல் இன்னிங்சில் 216 ரன்களுக்கு சுருண்டது. ரவி யாதவ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்