ஆப்நகரம்

இந்தியாவுக்கு பயிற்சியாளரா? தெறித்து ஓடும் மஹேலா ஜெயவர்த்தனே

இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கெல்லாம் போட்டியிடவில்லை என முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

TOI Sports 27 Jun 2017, 6:52 am
கொழும்பு :இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கெல்லாம் போட்டியிடவில்லை என முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mahela jayawardene not in race to be india coach
இந்தியாவுக்கு பயிற்சியாளரா? தெறித்து ஓடும் மஹேலா ஜெயவர்த்தனே


பல வேறு பிரச்னைகளை கடந்து இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே தன் பதவி காலம் முடியும் தருவாயில் ராஜினாமா செய்தார். இதைத் தொடந்து புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது.

இந்த பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லால்சந்த் ராஜ்புட், தொட்டா கணேஷ், ரிச்சர்ட் பைபஸ், டாம் மோடி மற்றும் சேவக் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்

ஜெயவர்த்தனே மறுப்பு:
இந்த பயிற்சியாளர் பட்டியலில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஜெயவர்த்தனே இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜெயவர்த்தனே, “யூகங்கள் அடிப்படையில் வெளியாகும் செய்திகள் தவறானவை. நான் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் போட்டியில் இல்லை. தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் குல்னா ஆகியவற்றிற்கு பயிற்சியாளராக உள்ளேன். அதிலேயே நான் கவனம் செலுத்துவேன்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்