ஆப்நகரம்

கேப்டன் பதவியைத் துறந்தார் தோனி

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளார்

TNN 4 Jan 2017, 9:18 pm
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளார்
Samayam Tamil mahendra singh dhoni steps down as indias limited overs captain
கேப்டன் பதவியைத் துறந்தார் தோனி


இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது திடீர் முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அதன் பிறகு மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வுக்குழு நாளை மறுநாள் (ஜனவரி 6) கூடும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி தலைமையில் இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் தோனியின் இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்