ஆப்நகரம்

வயது பித்தலாட்டம்... மஞ்சோத் கல்ராவுக்கு ஒரு ஆண்டு தடை!

புதுடெல்லி: வயது பித்தலாட்டம் செய்த காரணத்தால் இந்திய இளம் வீரர் மஞ்சோத் கல்ராவுக்கு ரஞ்சிக்கோப்பை தொடரில் பங்கேற்க ஒரு ஆண்டு தடைவிதிக்கப்படுள்ளது.

Samayam Tamil 2 Jan 2020, 4:16 pm
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் மஞ்சோத் கல்ரா (20 வயது). இவர் கடந்த 19 வயதுக்கு உட்படோருக்கான கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் சதம் விளாசி அசத்தினார். இதற்கிடையில் இவர் 16 வயதுக்கு உட்படோருக்கான கிரிக்கெட்டிலும் 19 வயதுக்கு உட்படோருக்கான கிரிக்கெட்டிலும் பங்கேற்ற போது வயது பித்தலாட்டம் செய்தது தற்போது தெர்யவந்தது.
Samayam Tamil Manjot kalra


1 ஆண்டு தடை
இதையடுத்து டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆம்புட்ஸ்மேன் (குறைகேட்கும் நபர்) இவர் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தடைவிதித்துள்ளார். இதே போல வயது பித்தலாட்டத்துக்காக நிதிஷ் ரானா, சிவம் மவி ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதிஷ் ரானாவுக்கு ஜூனியர் லெவலில் பங்கேற்ற போட்டிகளில் போது இன்னும் சில ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மவி விவகாரம்
அதேபோல சிவம் மவி விவகாரத்தில், தற்போது சீனியர் கிரிக்கெட்டில் பங்கேற்பதால் பிசிசிஐயிடம் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐயின் ஆவணங்களின் படி மஞ்சோத் கல்ராவுக்கு 20 வயது 351 நாட்களாகும். இவர் சமீபத்தில் நடந்த 23 வயதுக்கு உட்படோருக்கான போட்டியில் 80 ரன்கள் அடித்து அசத்தினார்.

வைபவுக்கு வாய்ப்பு
இவரின் தடையை தொடர்ந்து மொஹாலியில் நடக்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் கந்தபாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல ஷிகர் தவன் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோருக்கு பதில் சித்தாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்