ஆப்நகரம்

கிரிக்கெட் கடவுள் சச்சினும் கணினி முறையில் விளையாடியவர் தானாம்!

கிரிக்கெட்டின் 22 அடிகளில், ரசிகர்களுக்கு மலையளவு மகிழ்ச்சி தந்த கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தனது 44வது பிறந்தநாளை இன்று மும்பை வான்கடே மைதானத்த்ல் கேக் வெட்டி கொண்டாடினார்.

TOI Sports 24 Apr 2017, 9:15 pm
மும்பை : கிரிக்கெட்டின் 22 அடிகளில், ரசிகர்களுக்கு மலையளவு மகிழ்ச்சி தந்த கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தனது 44வது பிறந்தநாளை இன்று மும்பை வான்கடே மைதானத்த்ல் கேக் வெட்டி கொண்டாடினார்.
Samayam Tamil master blaster sachin tendulkar turns 44 today mi to celebrate his birthday at wankhede
கிரிக்கெட் கடவுள் சச்சினும் கணினி முறையில் விளையாடியவர் தானாம்!


கிரிக்கெட் கடவுள் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சச்சின் தனது 44வது பிறந்தநாள் இன்று கொண்டாடினார். மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிகளுக்கிடையே நடைப்பெற்று வருகின்றது.

மும்பை அணியின் ஆலோசகராக இருக்கும் சச்சின் போட்டியை காண நேரில் வந்திருந்தார். போட்டி நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது, மைதான வடிவிலான கேக்கை வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடினார்.



சச்சின் கூறியதாவது:
முதன் முதலாக ஐபிஎல் ஆரம்பிக்கும் போது, கிளப் அணிகளாக விளையாடுவது குறித்து எங்கள் அனைவருக்கும் இது புதிய கருத்தாக இருந்தது. ஆனால் இது காலப்போக்கில் கிரிக்கெட்டில் பெரும் புரட்சி செய்து வருகிறது.

அதேபோல 2003ல் டிரெஸ்ஸிங் ரூமில் முதன் முறையாக கணினி கொண்டு வந்து பேட்டிங், பவுலிங் குறித்து பல ஆலோசனை கொடுக்க ஆரம்பித்தனர். அப்போது கணினி எப்படி மனிதனுக்கு ஆலோசனை கொடுக்க முடியும் என கருதியதுண்டு. ஆனால் காலப்போக்கில் அது கொடுக்கும் பல ஆலோசனைகளை நானும் பயன்படுத்தியதுண்டு. தனிமனிதனின் திறனை வளர்ப்பதில் அதன் பங்கு அதிகரித்தது என கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்