ஆப்நகரம்

‘இரண்டு இட்லி கொஞ்சம் கெட்டிச்சட்னி’... : டாப்பு டக்கர் பார்முக்கு இதான் காரணம்: மாயங்க்!

புனே: அடுத்ததடுத்து இரண்டு சதம் விளாசி அசத்தியதன் சீக்ரெட் குறித்து இந்திய துவக்க வீரர் மாயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Oct 2019, 10:55 am
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, புனேவில் நடக்கிறது.
Samayam Tamil Mayank-Pujara-BCCI-video


மிரட்டல் மாயங்க்...
இந்நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர் மாயங்க் அகர்வால் (108) சதம் விளாசி அசத்த, இந்திய அணி வலுவான நிலையை எட்டியது. இந்நிலையில் அடுத்ததடுத்து சதம் விளாசி அசத்திய சீக்ரெட் குறித்து, மாயங்க் அகர்வால் பேசியுள்ளார்.

இந்த தப்பை மட்டும் ‘கிங்’ கோலி செய்யவே மாட்டார்... அவர் மூளை கம்ப்யூட்டர் மாதிரி: கவாஸ்கர்!undefined
புஜாரா பேட்டி...
இரண்டாவது டெஸ்டின் முதல்நாள் ஆட்டத்துக்கு பின், மாயங்க் அகர்வாலை, மற்றொரு இந்திய வீரர் புஜாரா பேட்டி எடுத்தார். அப்போது அடுத்து அடுத்து சதம் விளாசி அசத்தியது எப்படி என மாயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இரண்டு முதல் இன்னிங்ஸ்...
முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த மாயங்க் , இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் சதம் அடித்து மிரட்டினார். இந்நிலையில் மாயங்க் அகர்வாலிடம் சதம் அடிப்பதற்கு முந்தைய நாளில் என்ன சாப்பிட்டார் என புஜாரா கேள்வி எழுப்பினார்.


மன தைரியம்....
இதற்கு பதில் அளித்த மாயங்க் அகர்வால் கூறுகையில், ‘சிம்பிள், கொஞ்சம் சாம்பார், தேங்காய் சட்னியுடன் 2 இட்லி தான் சாப்பிட்டேன். அடுத்து அடுத்து இரு சதங்கள் விளாசியது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. இது போன்ற சில விஷயங்கள் மனதளவில் தைரியத்தை அளிக்கும்.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்