ஆப்நகரம்

‘ரன்-அவுட்’டானது குத்தமா? இப்படி கலாய்க்குறீங்க: மிதாலி!

உலகக்கோப்பை பைனலில், ரன் அவுட்டான காரணத்தை இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

TOI Sports 25 Jul 2017, 4:41 pm
லண்டன்: உலகக்கோப்பை பைனலில், ரன் அவுட்டான காரணத்தை இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mithali raj reveals why she got run out
‘ரன்-அவுட்’டானது குத்தமா? இப்படி கலாய்க்குறீங்க: மிதாலி!


இங்கிலாந்தில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் பைனலில்,இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டி, இங்கிலாந்தின் பாரம்பரிய கிரிக்கெட் மைதானமான லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

இதில் இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்டது. இப்போட்டியில் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய கேப்டன் மிதாலி ராஜ், ரன் அவுட்டானார். இதை சிலர் வேண்டும் என்றே தான் ரன் அவுட்டானதாக, சமூக வலைதளங்களில் கேலி செய்தனர்.

இதுகுறித்து மிதாலி ராஜ் கூறுகையில்,’ எனது ரன் அவுட் குறித்து சமூக வலைதளங்களில் சில விஷயங்களை பார்த்தேன். ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், பூனம் ரன் ஓட அழைத்த போது, எனது ஷூ.,வின் அடிப்பகுதி ஆடுகளத்தில் சிக்கிக்கொண்டது. ஆதனால் தான் என்னால் எல்லைக்கோட்டை விரைவாக எட்டமுடியவில்லை. அந்த நேரத்தில் டைவ் அடித்திருந்தாலும் விக்கெட்டை காப்பாற்றியிருக்க முடியாது. எதுவும் செய்ய முடியாததால் தான் அவுட்டானேன். ஆனால், இதை வேண்டும் என்று அவுட்டானதாக கூறுவது வருத்தம் அளிக்கிறது.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்