ஆப்நகரம்

திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய தொடக்க வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிராக 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அரைசதம் விளாசினர்.

TOI Sports 18 Dec 2016, 12:15 pm
சென்னை : இங்கிலாந்துக்கு எதிராக 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அரைசதம் விளாசினர்.
Samayam Tamil moeen sends parthiv back after career best 71
திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய தொடக்க வீரர்கள்


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகின்றது. இதன் 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா. இந்திய தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் பார்தீவ் படேல் அடுத்தடுத்து அரைசதம் அடித்து இந்திய அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்துள்ளனர். சிறப்பாக விளையாடிய படேல் 71 ரன்கள் எடுத்திருந்த பொழுது மோயின் அலியின் பந்தில் அவுட்டானார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்தீவின் அதிகபட்ச ரன்களாகும்.
3வது நாள் ஆட்டத்தின் முதல் உணவு இடைவேளையின் போது, கேஎல் ராகுல் 89 ரன்களுடனும், புஜாரா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இருமுறை காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறி பின் மீண்டும் அணியில் இணைந்துள்ள கேஎல் ராகுல் கடந்த இரு போட்டிகளில் சொதப்பி வந்தார். இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பாக விளையாடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய ராகுல் 89 ரன்களை விளாசி களத்தில் உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்