ஆப்நகரம்

இந்திய கிரிக்கெட் அணியில் தலித்களை முன்னிறுத்துவதா; முகமது கயிப் கடும் கண்டனம்!

கிரிக்கெட் அணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதில், சாதியை முன்னிறுத்துவதற்கு முகமது கயிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Jul 2018, 5:09 pm
புதுடெல்லி: கிரிக்கெட் அணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதில், சாதியை முன்னிறுத்துவதற்கு முகமது கயிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Kaif.


’தி வொயர்’(The Wire) எனப்படும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று, கிரிக்கெட் அணியில் தலித்கள் பங்களிப்பு குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்து, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவைச் சேர்ந்த 4 பேர் மட்டுமே விளையாடியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு விளையாடிய 290 பேரில் வெறும் 4 பேர் மட்டுமே தலித்கள். இந்த எண்ணிக்கையை ஒப்பிடுகையில், குறைந்தபட்சம் 70 பேராவது டெஸ்டில் பங்கேறிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி வொயர்’ டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கயிப், எஸ்.டி அல்லது எஸ்.டியைச் சேர்ந்த பிரைம் டைம் பத்திரிகையாளர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்? உங்கள் நிறுவனத்தின் மூத்த செய்தியாளர்களில் எத்தனை பேர் எஸ்.சி அல்லது எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள்?

விளையாட்டு என்பது சாதி, மத தடைகளை உடைத்தெறிந்து வெற்றிகரமாக ஒன்றிணைய வைக்கும் ஒரு தளம். எங்கள் வீரர்கள் வேறுபாடுகளைக் களைந்து தான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். உங்களைப் போன்ற சிலர் தான் வெறுப்பை விதைத்து, அதைப் பரவச் செய்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

Mohammad Kaif slams report on lack of minorities in Indian cricket team.

அடுத்த செய்தி

டிரெண்டிங்