பெங்களூரு: இந்திய கேப்டன் கோலியை கேலி செய்து பேசிய ஆப்கானிஸ்தான் குண்டு வீரர் முகமது ஷசாத், இந்தியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் ஓட முடியாமல் ரன் அவுட்டானார்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி.,) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து அளித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வரலாற்றை வல்லரசு இந்திய அணியுடம் விளையாட முடிவு செய்தது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று துவங்கியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. பாண்டியா (10), அஷ்வின் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
பாண்டியா அரைசதம்:
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு அஷ்வின் (18) நிலைக்கவில்லை. ரவிந்திர ஜடேஜா (20) ஏமாற்றினார். ஹர்திக் பாண்டியா (71) அரைசதம் அடித்து கைகொடுத்தார். இஷாந்த் சர்மா (8) வந்த வேகத்தில் பெவிலியம் திரும்ப, இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆப்கானிஸ்தான் அணி 109 ரன்களுக்கு சுருண்டது.
குண்டுப்பையன்.....
இந்நிலையில் சரியானம் முறையில் சிக்சர் அடிக்கும் போது இந்திய கேப்டன் கோலி போல பிட்டாக இருக்க வேண்டிய தேவையில்லை என முன்பு ஆப்கானிஸ்தான் குண்டு வீரர் முகமது ஷசாத், தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று முதல் இன்னிங்சில் ஷசாத், 14 ரன்கள் எடுத்த போது பாண்டியா பக்கமாக தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார். ஆனால், அவரைவிட பாண்டியா வேகமாக ஸ்டெம்ப்பை பதம்பார்க்க, ஷசாத் பரிதாபமாக வெளியேறினார். பின் இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பிய ஷசாத் 13 ரன்னில் அவுட்டானார். கோலியின் பிட்னஸ் குறித்து கேலியாக பேசிய ஷசாத்துக்கு தற்போது பிட்னஸ் குறித்த அருமை தெரிந்திருக்கும்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி.,) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து அளித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வரலாற்றை வல்லரசு இந்திய அணியுடம் விளையாட முடிவு செய்தது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று துவங்கியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. பாண்டியா (10), அஷ்வின் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
பாண்டியா அரைசதம்:
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு அஷ்வின் (18) நிலைக்கவில்லை. ரவிந்திர ஜடேஜா (20) ஏமாற்றினார். ஹர்திக் பாண்டியா (71) அரைசதம் அடித்து கைகொடுத்தார். இஷாந்த் சர்மா (8) வந்த வேகத்தில் பெவிலியம் திரும்ப, இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆப்கானிஸ்தான் அணி 109 ரன்களுக்கு சுருண்டது.
குண்டுப்பையன்.....
இந்நிலையில் சரியானம் முறையில் சிக்சர் அடிக்கும் போது இந்திய கேப்டன் கோலி போல பிட்டாக இருக்க வேண்டிய தேவையில்லை என முன்பு ஆப்கானிஸ்தான் குண்டு வீரர் முகமது ஷசாத், தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று முதல் இன்னிங்சில் ஷசாத், 14 ரன்கள் எடுத்த போது பாண்டியா பக்கமாக தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார். ஆனால், அவரைவிட பாண்டியா வேகமாக ஸ்டெம்ப்பை பதம்பார்க்க, ஷசாத் பரிதாபமாக வெளியேறினார். பின் இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பிய ஷசாத் 13 ரன்னில் அவுட்டானார். கோலியின் பிட்னஸ் குறித்து கேலியாக பேசிய ஷசாத்துக்கு தற்போது பிட்னஸ் குறித்த அருமை தெரிந்திருக்கும்.