ஆப்நகரம்

தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பாரா முகமது சிராஜ்?

முகமது சிராஜ் தற்போது மருத்துவப் பாதுகாப்பு வட்டத்திற்குள் இருந்து சிட்னியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால், தந்தையின் இறுதிச் சடங்கில் அவரால் பங்கேற்க முடியாது எனக் கூறப்படுகிறது.

Samayam Tamil 21 Nov 2020, 7:08 am
முகமது சிராஜின் தந்தை காலமானதைத் தொடர்ந்து, சிட்னியில் உள்ள முகமது சிராஜிற்கு ட்விட்டர் மூலம் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil mohammed siraj


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணி வீரர் முகமது சிராஜ், தற்போது சிட்னி நகரில் மருத்துவப் பாதுகாப்பு வட்டத்திற்குள் இருந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நுரையீரல் தொற்றுக் காரணமாகச் சிகிச்சை பெற்றுவந்த அவரது தந்தை முகமது கொவுஸ், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சிட்னியில் உள்ள சிராஜிற்கு ட்விட்டர் மூலம் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியிட்ட ட்வீட்டில், “நமது அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை காலமான செய்தியை அறிந்தோம். அவருக்கும், அவரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் சிராஜிற்கு பக்கபலமாக இருப்பது எங்கள் கடமை. தைரியமா இருங்கள் சிராஜ்” எனப் பதிவிட்டுள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 22 வயதில் 2ஆவது முறை சாம்பியன்!

கிரிக்கெட் வர்ணனையாளர், பத்திரிகையாளருமான ஹர்ஷா போக்லே வெளியிட்ட இரங்கள் குறிப்பில், “முகமது சிராஜ் மற்றும் அவரது குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கை சில நேரங்களில் கொடூரமாக மாறலாம். தந்தை குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் சிராஜ் பேசியதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெட்டிசன்களும் “தைரியமாக இருங்க அண்ணா” என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முகமது சிராஜ் தற்போது மருத்துவப் பாதுகாப்பு வட்டத்திற்குள் இருந்து சிட்னியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால், தந்தையின் இறுதிச் சடங்கில் அவரால் பங்கேற்க முடியாது எனக் கூறப்படுகிறது. ஒருவேளை அவர் இந்தியா திரும்பினால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்