ஆப்நகரம்

‘தோனிக்கு ரெய்னா’…ரோஹித்துக்கு இஷான் கிஷன்: ஹார்திக் பாண்டியாவுக்கு இவர்…நவீன ‘வாரிசுகள்’!

தோனிக்கு ரெய்னா இருந்ததை போல, ரோஹித்துக்கு இஷான் கிஷன் இருந்ததை போல, ஹார்திக் பாண்டியாவுக்கு இவர் கிடைத்துள்ளார்.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 3 Jan 2023, 7:31 am
மகேந்திரசிங் தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் ரெகுலராக இடம்பிடித்து வந்தார். இந்த இருவருக்குமான நட்பு ஐபிஎல் தொடரில் இருந்துதான் ஆரம்பித்தது. 2008ஆம் ஆண்டு முதல் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத்தான் இணைந்து விளையாடி வந்தார்கள்.
Samayam Tamil ஹார்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மா, தோனி


ஐபிஎலில் சுரேஷ் ரெய்னா அதிரடியாக, அபாரமாக செயல்பட்டு வந்ததால், அப்போதைய இந்திய அணிக் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னாவுக்கு ரெகுலராக இடம்கொடுத்து வந்தார். அந்த அளவுக்கு ரெய்னாவிடம் திறமையும் இருந்தது. திறமையற்றவராக இருந்திருந்தால், ரெய்னாவை தோனி ஓரங்கட்டிருப்பார் என்பதுதான் உண்மை.

கடும் விமர்சனம்:

இருப்பினும், 2016ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போதுதான் தோனி, ரெய்னா பார்ட்னர்ஷிப் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அப்போது சேவாக், யுவராஜ் சிங் போன்ற முக்கிய வீரர்களை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதபோது, சுரேஷ் ரெய்னா இடம்பெற்றிருந்தார். ரெய்னாவைப் போல சேவாக்கும் தோனியை காக்கா பிடித்திருந்தால், இந்நேரம் சேவாக்கும் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்திருப்பார் என சேவாக் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்கள்.

கோலி கேப்டன்ஸியில்:

இதனைத் தொடர்ந்து விராட் கோலி கேப்டன்ஸியில், அப்போதைய ஆர்சிபி வீரர் கே.எல்.ராகுலுக்கு ரெகுலராக வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அடுத்த கேப்டன் என்ற முறையில்தான் ராகுலை பிசிசிஐயே வளர்த்துவிட பார்த்தது.

ரோஹித் கேப்டன்ஸியில்:

அடுத்து ரோஹித் ஷர்மா கேப்டன்ஸியில் மும்பை இந்தியன்ஸ் ஓபனர் இஷான் கிஷனுக்கு ரெகுலராக வாய்ப்பு வழங்கப்பட்டது. இஷான் கிஷன் எவ்வளவுதான் சொதப்பினாலும், ருதுராஜ் கெய்க்வாட் பெஞ்சில்தான் அமர வைக்கப்பட்டார். டி20 போட்டிகளில் இஷான் கிஷன் பவர் பிளேவில் படுமோசமாக சொதப்பியபோதும், ரெகுலராக இடம்பெற்றது கடும் விமர்சனங்களை பெற்று வந்தது. இப்படி ரெகுலராக வாய்ப்பினை பெற்ற இஷான் கிஷன், சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாற் போட்டியில் இரட்டை சதம் அடித்து, இடத்தை தக்கவைத்துவிட்டார்.

ஹார்திக் கேப்டன்ஸியில்:

தற்போது டி20 அணிக்கு ஹார்திக் பாண்டியா கேப்டன்ஸியை ஏற்றுள்ளார். இவர் கேப்டன் பதவியை ஏற்ற உடனே, டி20 அணிக்குள் குஜராத் டைடன்ஸ் ஓபனர் ஷுப்மன் கில்லை அணிக்குள் கொண்டு வந்துவிட்டார். தற்போது இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டியிலாவது கில் விளையாடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

இப்படி நவீன ‘வாரிசுகள்’ இந்திய அணியில் 2008ஆம் ஆண்டு முதலே தொடர்ந்து வருகிறது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்