ஆப்நகரம்

ஓவர் நைட்டில் மீண்டும் டிரெண்டான ‘தல’ தோனி......: வழக்கம் போல மௌனம்!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் தோனி வழக்கம் போல மௌனம் காத்து வருகிறார்.

Samayam Tamil 29 Oct 2019, 11:22 am
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் உலகக்கோப்பை தொடருக்கு பின் இதுவரை எந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதற்கு தோனி தானாக ஓய்வில் உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil MS Dhoni


ஓதுக்கப்படுகிறார்...
ஆனால் பிசிசிஐ தேர்வுக்குழு வட்டாரத்தில், நிச்சயமாக தோனியை தாண்டி அடுத்த வீரருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ட்விட்டரில் தோனியின் ஓய்வு குறித்து ரசிகர்கள் விவாதித்து வருவது வழக்கம்.

வாய் திறக்க வைக்க...
இதே போல திடீரென #MSDhoniretires என்ற ஹாஸ்டேக் டிரெண்டானது. தோனி தனது ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக வாய்திறக்காத நிலையில் திடீரென இப்படி ஒரு ஹாஸ்டேக் டிரெண்டானது, அவர் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பொறுப்பில்லை...
அதேநேரம் தோனி ரசிகர்கள் இதை வெறும் வதந்தி என வாதம் செய்துவந்தனர். இத்தனை முறை ட்விட்டரில் ரசிகர்கள், விவாத தளமாக மாறிய போதும், தோனி கொஞ்சம் கூட அசராமல் அதிகாரப்பூர்வ அறிவிப்போ, தன் எதிர்காலம் குறித்து எவ்வித விளக்கமோ அளிக்காதது, பொறுப்பில்லாமல் செயல்படுவதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நம்பர்-1 டிரெண்டிங்...
தோனியின் இந்த பொறுப்பில்லாத தனத்தால், அவரைப்பற்றிய வதந்தி கூட நம்பர்-1 டிரெண்டிங்கில் இந்திய அளவில் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் இந்த சர்ச்சைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி கொண்டு வரவேண்டியது அவசியம் என்பதை தோனி உணர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






ஐபிஎல் உறுதி....
சர்வதேச கிரிக்கெட்டில் இனி தோனியை பார்க்க முடியுமோ இல்லை முடியாதோ, ஆனால் இப்போதைக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், அடுத்த ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி களமிறங்குவது உறுதி என்பது மட்டுமே தோனி ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்