தனது பவரான ஷாட்களாலும், இமாலய சிக்சர்களாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தோனி. இந்நிலையில் தோனி மூன்றாவது வீரராக களமிறங்கியிருந்தால் பல சாதனைகளை தகர்த்திருப்பார் என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பீர் கூறுகையில், “சர்வதேச கிரிக்கெட் ஒருவிஷயத்தை தவறவிட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அது இந்திய அணியை கேப்டனாக தோனி வழிநடத்திய போது மூன்றாவது பேட்ஸ்மேனாக அவரை பார்க்கவில்லை. ஒருவேளை அவர் மூன்றாவது வீரராக அவர் தொடர்ந்து விளையாடியிருந்தால், வேறுவிதமான தோனியை பார்த்திருக்கலாம்.
அவர் மேலும் அதிகமான ரன்கள், மேலும் பல்வேறு சாதனைகளை படைத்திருப்பார். சாதனைகள் என்பது தகர்ப்படுவது சகஜம் தான். ஆனால் ஒரு மிகவும் அற்புதமான கிரிக்கெட் வீரராக உருவாகியிருந்திருப்பார். இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தோனி மூன்றாவது இடத்தில் விளையாடியிருந்தால், அவர் ஏகப்பட்ட சாதனைகள் படைக்க உதவியிருக்கும்” என்றார்.
கடைசியாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி அரைசதம் அடித்திருந்தார். இருந்தாலும் இந்திய அணியை 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை கடக்க உதவ தவறினார். இதற்கு பின் தோனி தானாக 2 மாதங்கள் இந்திய அணியில் இருந்து விலகியிருந்தார். அதேநேரம் 15 நாட்கள் இந்திய ராணுவத்திறக்காக பணிக்கு சென்றிருந்தார். இதனால் இவர் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு குறைந்த கொண்டே உள்ளது.
இதுகுறித்து காம்பீர் கூறுகையில், “சர்வதேச கிரிக்கெட் ஒருவிஷயத்தை தவறவிட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அது இந்திய அணியை கேப்டனாக தோனி வழிநடத்திய போது மூன்றாவது பேட்ஸ்மேனாக அவரை பார்க்கவில்லை. ஒருவேளை அவர் மூன்றாவது வீரராக அவர் தொடர்ந்து விளையாடியிருந்தால், வேறுவிதமான தோனியை பார்த்திருக்கலாம்.
அவர் மேலும் அதிகமான ரன்கள், மேலும் பல்வேறு சாதனைகளை படைத்திருப்பார். சாதனைகள் என்பது தகர்ப்படுவது சகஜம் தான். ஆனால் ஒரு மிகவும் அற்புதமான கிரிக்கெட் வீரராக உருவாகியிருந்திருப்பார். இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தோனி மூன்றாவது இடத்தில் விளையாடியிருந்தால், அவர் ஏகப்பட்ட சாதனைகள் படைக்க உதவியிருக்கும்” என்றார்.
கடைசியாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி அரைசதம் அடித்திருந்தார். இருந்தாலும் இந்திய அணியை 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை கடக்க உதவ தவறினார். இதற்கு பின் தோனி தானாக 2 மாதங்கள் இந்திய அணியில் இருந்து விலகியிருந்தார். அதேநேரம் 15 நாட்கள் இந்திய ராணுவத்திறக்காக பணிக்கு சென்றிருந்தார். இதனால் இவர் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு குறைந்த கொண்டே உள்ளது.