ஆப்நகரம்

‘கிங்’ கோலி ஏற்கனவே அந்த இடத்தை பிடித்து விட்டார் : ‘தல’ தோனி!

ஜாம்பவான் அந்தஸ்தை ஏற்கனவே இந்திய கேப்டன் விராட் கோலி அடைந்துவிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Aug 2018, 5:56 pm
லண்டன்: ஜாம்பவான் அந்தஸ்தை ஏற்கனவே இந்திய கேப்டன் விராட் கோலி அடைந்துவிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 7


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதில் இந்திய கேப்டன் கோலி தவிர, மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சாதிக்கவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து விமர்சித்த, சஞ்சய் மஞ்ரேக்கரை இந்திய ரசிகர்கள் விட்டு விளாசி வருகின்றனர்.

ஜாம்பவான் அந்தஸ்து:
இந்நிலையில் ஜாம்பவான் அந்தஸ்தை ஏற்கனவே இந்திய கேப்டன் விராட் கோலி அடைந்துவிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தோனி கூறுகையில், ‘விராட் கோலி மிகச்சிறந்த வீரர். அவர் ஏற்கனவே ஜாம்பவான் அந்தஸ்தை அடைந்து விட்டார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அம்பயரிடம் இருந்து பந்தை பெற்றதுபவுலிங் பயிற்சியாளரிடம் கொடுக்கத் தான் வாங்கினேன். ’ என்றார்.

Virat is the best and he's already reached a status where he is close to a legend stage. I am happy for him and the way he has batted. He has been brilliant in the last few years.

அடுத்த செய்தி

டிரெண்டிங்