ஆப்நகரம்

இந்த விஷயத்துல தமிழன் தான் 'கெத்து’: தோனி!

‘தமிழ் ரசிகர்கள் அன்புக்கு அளவே இல்லை’ என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்தார்.

TOI Sports 22 Jul 2017, 7:31 pm
சென்னை: ‘தமிழ் ரசிகர்கள் அன்புக்கு அளவே இல்லை’ என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்தார்.
Samayam Tamil msdhoni thanks to chennai fans for their continued support
இந்த விஷயத்துல தமிழன் தான் 'கெத்து’: தோனி!


இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் பாணியில், தமிழ்கத்தில் கடந்த 2016ல் தமிழக பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்டது. இந்த ஆண்டு நடக்கும் இத்தொடரில், தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், கோவை, காரைக்குடி, திருவள்ளூர், திருச்சி, மதுரை என மொத்தமாக 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த ஆண்டுக்கான தொடரை தோனி கோலாகலமாக துவங்கி வைத்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் திரும்பி வந்துள்ள தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரவேற்க, சிக்சர் போட்டி நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற பின் பேசிய தோனி,’இரண்டு வருடமாக ஐபிஎல்., தொடரில் பங்கேற்காத போதும், ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர, குறையவில்லை. இது தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள அன்பை காட்டுகிறது. தமிழர்களின் அன்புக்கு அளவே இல்லை. எனது தாய்விட்டில் இருக்கும் உணர்வை எனக்கு இது அளிக்கிறது.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்