ஆப்நகரம்

பேட்டிங் செய்த போது கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!

மும்பை கிரிக்கெட் வீரர் வைபவ் கேஸ்கர் என்பவர் மாரடைப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளார்.

Samayam Tamil 25 Dec 2018, 5:27 pm
மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வைபவ் கேஸ்கர் என்பவர் மாரடைப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளார்.
Samayam Tamil vaibhav-kesarkar


மத்திய மும்பையின் பண்டப் பகுதியில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் நடைப்பெற்றது. அதில் கடந்த 23ம் தேதி நடந்த போட்டியில் அப்பகுதியை சேர்ந்த வைபவ் கேஸ்கர் என்ற 24 வயது வீரர் கலந்து கொண்டார்.

அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த வைபவ் கேஸ்கர், திடீரென மைதானத்தில் மாரடைப்பு காரணமாக சரிந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மும்பை கிரிக்கெட் வட்டாரங்களில் உள்ள சிறந்த வீரராக அறியப்பட்டவர் கேஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்