ஆப்நகரம்

Mumbai Indians: இந்த மூணுபேரை மட்டும் நீக்குகிறதா மும்பை இந்தியன்ஸ் அணி...?

மும்பை: ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக, மூணு வீரர்களை கழட்டிவிட, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Samayam Tamil 13 Nov 2019, 5:40 pm
இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலம், வரும் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடக்கவுள்ளது.
Samayam Tamil Mumbai Indians


இறுதிப்பட்டியல்...
இந்த வீரர்கள் ஏலத்துக்கு முன்பாக, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தக்க வைக்கும் வீரர்கள், மற்ற அணிகளுக்கு மாறும் வீரர்கள் இறுதிபட்டியலை நாளைக்குள் (நவம்பர் 14) அறிவிக்க வேண்டும்.

இஷான் கிஷான்...
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வெற்றி அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று வீரர்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் கடந்த 2018ல் ஏலத்தில், ரூ. 6.20 கோடிக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷானை நீக்கிவிட்டு பின் ஏலத்தில் குறைந்த விலைக்கு மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த ஐபிஎல் தொடரில் நான்கு சீனியர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமா?

பரிந்தர் ஸ்ரான்...
மும்பை இந்தியன்ஸ் அணி, ரூ. 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்த இரண்டு போட்டியில் இவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை. மாறாக, 4 ஓவர்கள் வீசி 51 ரன்கள் இவர் விட்டுக்கொடுத்தார். தற்போதும் உள்ளூர் கிரிக்கெட்டில் இவரின் சாதனைகளை சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை.

எப்போ சிக்கல் வந்தாலும் ‘தல’ தோனியின் அறிவுரையை நினைச்சுக்குவேன்...: சகார்!

எவின் லீவிஸ்...
மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போதுள்ள துவக்க வீரர்களின் எண்ணிக்கையே இவரை வெளியேற்ற அணி நிர்வாகம் எடுத்த இந்த முடிவுக்கு காரணம் என தெரிகிறது. இவரை கடந்த 2018 தொடருக்கு முன்பாக ரூ. 3.8 கோடி ஏலத்தில் எடுத்தது. இவர் கடந்த ஆண்டில் வெறும் 3 போட்டியில் மட்டுமே விளையாடினார். இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததற்கு, ரோஹித் ஷர்மா பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறங்குவதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்த மூன்று வீரர்களை வெளியேற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்துக்கு முன்பாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்