பெங்களூரு அணிக்கு எதிரான 38வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் மும்பையில் நடக்கும் 38வது லீக் போட்டியில், மும்பை, பெங்களூரு அணி மோதுகின்றன.
முதலில் டாஸ் வென்ற கோபக்கார கோலி வழக்கத்திற்கு மாறாக பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதில் டிவிலியர்ஸ் 43 ரன்களும், நெகி 35 ரன்களும், ஜாதவ் 28 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கில் மெக்லேகன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் 163 ரன்களை இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. இதில் பார்த்திவ் படேல் ரன் ஏதும் எடுக்காமல் அதிர்ச்சியளித்தார். ஜோஸ் பட்லர் 33 ரன்கள், நிதிஷ் ராணா 27 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா நிலைத்து நிற்க மும்பை இந்தியன்ஸ் 19.5வது ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குர்னல் பாண்டியா காயம்:
மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் செய்யும் போது குர்னல் பாண்டியாவுக்கு பந்து இடுப்பில் பட்டு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பேட்டிங் செய்யும் போது மீண்டும் வலி ஏற்பட ரிட்டயர்ட் கர்ட் முறையில் வெளியேறினார். #IPL Match 38: @mipaltan all-rounder Krunal Pandya has hurt himself and is off the field at the moment #MIvRCB pic.twitter.com/Khb6zv6Xg4 — IndianPremierLeague (@IPL) May 1, 2017
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் மும்பையில் நடக்கும் 38வது லீக் போட்டியில், மும்பை, பெங்களூரு அணி மோதுகின்றன.
முதலில் டாஸ் வென்ற கோபக்கார கோலி வழக்கத்திற்கு மாறாக பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதில் டிவிலியர்ஸ் 43 ரன்களும், நெகி 35 ரன்களும், ஜாதவ் 28 ரன்களும் எடுத்தனர். பவுலிங்கில் மெக்லேகன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் 163 ரன்களை இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. இதில் பார்த்திவ் படேல் ரன் ஏதும் எடுக்காமல் அதிர்ச்சியளித்தார். ஜோஸ் பட்லர் 33 ரன்கள், நிதிஷ் ராணா 27 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா நிலைத்து நிற்க மும்பை இந்தியன்ஸ் 19.5வது ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குர்னல் பாண்டியா காயம்:
மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் செய்யும் போது குர்னல் பாண்டியாவுக்கு பந்து இடுப்பில் பட்டு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பேட்டிங் செய்யும் போது மீண்டும் வலி ஏற்பட ரிட்டயர்ட் கர்ட் முறையில் வெளியேறினார். #IPL Match 38: @mipaltan all-rounder Krunal Pandya has hurt himself and is off the field at the moment #MIvRCB pic.twitter.com/Khb6zv6Xg4 — IndianPremierLeague (@IPL) May 1, 2017