ஆப்நகரம்

டெஸ்டில் விக்கெட் வேட்டையை தொடங்கினார் நடராஜன்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன்.

Samayam Tamil 15 Jan 2021, 12:15 pm
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது (கடைசி) டெஸ்ட் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமாகியுள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கணக்கைத் தொடங்கினார்.
Samayam Tamil natarajan test


இப்போட்டியில் இவர் வீசிய முதல் பந்து நோ பாலாக சென்றது. இரண்டாவது ஓவரை வீசியபோதும் முதல் பந்தையும் நோ-பாலாக வீசினார். முதல் செஷனில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. தொடர்ந்து இரண்டாவது செஷனிலும் கடுமையாகப் போராடினார். பந்துகளை ஆஃப் திசையில் வீசுவது, பவுண்சர் வீசுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டும் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.

கடைசி செஷனில் நடராஜன் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தனது 13ஆவது ஓவரில் மேத்யூ வேட் (45) விக்கெட்டை வீழ்த்தினார். தனது அடுத்த ஓவரிலேயே சதம் கடந்த மார்னஸ் லபுஷேனை (108) பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
நடராஜன், சுந்தர் சேர்ப்பு: ஆஸிக்கு துவக்கத்திலேயே மரண அடி!
நடராஜன் சிறப்பாக பந்துவீசி வந்தாலும் அடிக்கடி நோ பால் வீசி வருகிறார். இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் டெஸ்ட் அரங்கில் முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இருவரும் தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசி வருகின்றனர்.
மாஸ் காட்டும் லபுஷேன்: இந்திய அணி தடுமாற்றம்!
சக பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் நடராஜன், முகமது சிராஜ், ஷர்தூல் தாகூர், சுந்தர் போன்றவர்கள் மட்டுமே பந்துவீசி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்