ஆப்நகரம்

விஜய் ஹசாரே டிராபி: ஜார்க்கண்டிற்கு விளையாட தோனி மறுத்ததால் தேசிய தேர்வாளர்கள் ஏமாற்றம்!

புதுடெல்லி: ஜார்க்கண்ட் அணியில் விளையாட முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Oct 2018, 1:17 am
உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் ஜார்க்கண்ட் அணியின் காலிறுதியில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி விளையாடுவார் என்று தேசிய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அறிவித்திருந்தார்.
Samayam Tamil Dhoni


இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் முதன்மை பயிற்சியாளர் ராஜிவ் குமார், காலிறுதியில் விளையாட விருப்பம் இல்லை என்று தோனி தெரிவித்துள்ளார். தற்போதைய பேட்டிங் திறனுடன் விளையாடுவது சரியல்ல.

ஜார்க்கண்ட் அணி சிறந்த வீரர்களுடன் அருமையான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. தனது பங்களிப்பு இன்றியே காலிறுதி வரை சென்றுள்ளது. எனவே அணியின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை என்று கூறியதாக தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பேட்டிங்கில் தோனி பெரிதாக சாதிக்கவில்லை. மிக மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார். நடப்பாண்டில் வெறும் 22 நாட்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.

அதில் 15 ஒருநாள், 7 டி20 போட்டிகள் அடங்கும். விஜய் ஹசாரே டிராபியில் தற்போது 32 புள்ளிகளுடன் லீக் பிரிவில் ஜார்க்கண்ட் அணி முதலிடத்தில் இருக்கிறது.

National selectors left red-faced as MS Dhoni refuses to play for Jharkhand in quarters.

அடுத்த செய்தி

டிரெண்டிங்