ஆப்நகரம்

வரம் கேட்க போன இடத்தில் நீதா அம்பானியை ஏமாற்றிய சாமி

ஹைதராபாத்தில் உள்ள எல்லம்மா கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி கலந்து கொண்டு அணியின் வெற்றிக்கு வேண்டிக்கொண்டார்.

TOI Contributor 9 May 2017, 9:22 am
ஹைதராபாத்தில் உள்ள எல்லம்மா கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி கலந்து கொண்டு அணியின் வெற்றிக்கு வேண்டிக்கொண்டார்.
Samayam Tamil neetu ambani visited balkampet yellamma temple hyderabad to perform special pooja for mumbai indians
வரம் கேட்க போன இடத்தில் நீதா அம்பானியை ஏமாற்றிய சாமி


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் ஹைதராபாத்தில் நடந்த 48வது லீக் போட்டியில், மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ’டாஸ்’ வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

ரோகித் ஆறுதல்:

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா (67) அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மும்பை அணி, 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் மட்டும் எடுத்தது.

நீதா அம்பானியை ஏமாற்றிய சாமி:

நேற்று நடந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி தன்னுடைய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஹைதராபாத்தில் உள்ள பால்கம்பெட் யெல்லம்மா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். ஆனால், யெல்லம்மாள் சாமியோ வரத்தை மாற்றிக் கொடுத்து ஹைதராபாத் அணியை வெற்றி பெறச் செய்துள்ளது.



சூடான சுள்ளான் ஷிகர்:

இதையடுத்து எளிய இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணியில் ஹென்றிக்ஸ் (44), ஷிகர் தவான் (62) நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியில், ஹைதராபாத் அணி 18.2 ஓவர் முடிவில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 140 ரன்கள் சேர்த்து 8வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்