ஆப்நகரம்

ஆர்ச்சரை அவமானப் படுத்தியவருக்கு இரண்டு ஆண்டு தடை!

வெலிங்டன்: நியூசிலாந்து தொடரின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் தோளின் நிறம் குறித்து பேசிய நியூசிலாந்தைச் சேர்ந்த நபருக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் இருந்து இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Jan 2020, 2:06 pm
நியூசிலாந்து சென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இத்தொடரை நியூசிலாந்து அணி 1-0 என கைப்பற்றியது. இந்நிலையில் மவுண்ட் மாங்கானியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Samayam Tamil Jofra Archer


இனவெறி விமர்சனம்
இதற்கிடையில் இப்போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தின் போது தனது இனம் குறித்து ரசிகர் ஒருவர் விமர்சித்ததாக இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார். அப்போது ஆர்ச்சர் வெளியிட்டுள்ள பதிவில்,“ஒரே ஒருவரைத் தவிர, ரசிகர்கள் மிகச்சிறப்பாக இருந்தனர். வழக்கம் போல பார்மி ஆர்மி ரசிகர்கள் அசத்தல். ஆனால் இனம் குறித்த விமர்சனம் எனக்கு பேட்டிங் செய்யும் போது தொந்தரவாக இருந்தது.” என குறிப்பிட்டிருந்தார்.


வெஸ்ட் இண்டீஸ் வீரர்
பார்போடாசில் பிறந்த ஆர்ச்சர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ,வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடினார். கடந்த 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்காக அறிமுகமாகி அசுர வேகத்தில் மிரட்டினார்.

மன்னிப்பு கேட்ட நியூசி
ஆர்ச்சருக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, அதற்கு காரணமானவரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதேபோல் இந்த சம்பவத்துக்கு காரணமானவரை தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு கண்டுபிடித்து அவருக்கு நியூசிலாந்தில் நடக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டியை காண இரண்டு ஆண்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மீறினால் போலீஸ் நடவடிக்கை
இந்த தடையை மீறினால் அவர் மீது போலிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் தனது தவறை ஒப்புக்கொண்டதால் வரும் 2022 வரை நியூசிலாந்தில் நடக்கும் எந்த போட்டியையும் காண முடியாது. மேலும் இந்த நிகழ்வுக்காக ஆர்ச்சரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்