ஆப்நகரம்

வங்கதேசத்திற்கு வலு கொடுக்க அணியில் இணைந்தார் சகிப் அல் ஹசன்

சுதந்திர கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று இலங்கை - வங்கதேச அணிகள் விளையாட உள்ளன.

Samayam Tamil 16 Mar 2018, 10:07 am
கொழும்பு : சுதந்திர கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று இலங்கை - வங்கதேச அணிகள் விளையாட உள்ளன.
Samayam Tamil nidahas trophy 2018 shakib al hasan returns to bangladesh squad
வங்கதேசத்திற்கு வலு கொடுக்க அணியில் இணைந்தார் சகிப் அல் ஹசன்


இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடத்துகின்றது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்று வருகின்றன.

இத்தொடரில் இந்தியா 4 போட்டியில் 3 வெற்றியை பெற்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்று நடைப்பெறும் கடைசி லீக் போட்டியில் இலங்கைக்கு எதிரான வங்கதேசம் விளையாட உள்ளது.

சகிப் அல் ஹசன் வருகை :
சர்வதேச அரங்கில் டெஸ்ட், ஒருநாள் போட்டியில் முதலிடத்திலும், டி20 போட்டியில் 2வது தரவரிசையிலும் இருக்கும் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹசன் அந்த அணிக்கு வலுசேர்க்கும் வகையில் இணைந்துள்ளார்.

காயம் காரணமாக அவதிப்பட்ட சகிப் அல் ஹசன் அணிக்கு திரும்பியுள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகின்றது.

அதே சமயம் இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெரேரா இந்தியா உடன் விளையாடிய போது தண்டு தசை பிடிப்பு ஏற்பட்டது. அணியில் இடம்பெற மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் தற்போதூ அவர் காயம் குணமடைந்து விட்டதால் அணியில் இடம்பெறுவார் என கூறப்பட்டுள்ளது.

இறுதிக்கு முன்னேறுவது யார்?
இலங்கை, வங்கதேச அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடைப்பெறும் கடைசி லீக் போட்டியில் யார் வெற்றி பெறுகின்றனரோ அந்த அணி ஞாயிறு அன்று நடைப்பெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர் கொள்ளும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்