ஆப்நகரம்

தோனியையும் என்னையும் யாராலையும் பிரிக்க முடியாது: விராத் கோலி

முன்னாள் கேப்டன் தோனிக்கும் எனக்கும் இடையேயான நட்பை யாராலும் பிரிக்க முடியாது என தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

TOI Sports 5 Nov 2017, 8:01 pm
முன்னாள் கேப்டன் தோனிக்கும் எனக்கும் இடையேயான நட்பை யாராலும் பிரிக்க முடியாது என தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil nobody can affect my relationship with ms dhoni kohli
தோனியையும் என்னையும் யாராலையும் பிரிக்க முடியாது: விராத் கோலி


இந்திய அணியின் கேப்டன் விராத்கோலி ‘பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருக்கும் தோனிக்கும் இடையேயான நட்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கேப்டன் கோலி,”எனக்கும் தோனிக்கும் இடையில் கருத்து வேறுபாடு என பத்திரிக்கைகளில் எழுதிவருகின்றனர். அதை நானோ தோனியோ கண்டுகொள்வதில்லை.

அவற்றை பார்க்கும்போது எங்களுக்கு சிரிப்புதான் வரும். எனக்கும் தோனிக்கும் இடையிலான நட்பை யாராலும் பிரிக்க முடியாது. அவர் குழந்தையைப் போல எப்போதும் உற்சாகத்துடனே இருப்பார். கிரிக்கெட்டில் அவரைப் போல ஒரு புத்திசாலியைப் பார்த்ததே இல்லை.

நான் அவரிடம் 10 முறை ஆலோசனை கேட்டால் அதில் 8 அல்லது 9 முறை அவர் அளிக்கும் ஆலோசனைகள் சரியாகவே இருக்கும். அவரின் திறமைகளை நான் கண்மூடித்தனமாக நம்புபவன். அவருடன் பேட்டிங் செய்யும்போது, அவர் 2 ரன்கள் ஓடலாம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஓடிவிடுவேன்.

நான் கேப்டனாக இருக்கும் ஆரம்பக் காலங்களில் அவரைப் போன்ற வீரர் என்னுடன் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்”, என்று தெரிவித்துள்ளார்.

Nobody can affect my relationship with MS Dhoni: Kohli

அடுத்த செய்தி

டிரெண்டிங்