கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 9 பேர் உயிர் இழந்தனர். தவிர பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, மற்றொரு மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுள்ள வங்கதேச அணி வீரர்கள் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதியில் இருந்தனர்.
ஆனால் அவர்கள் பத்திரமாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் ஹோட்டலில் உள்ளதாகவும், ஆனால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் என வங்கதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
Christchurch Shooting: நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு: 'எஸ்கேப்பான' வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்!
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். இதில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
Samayam Tamil 15 Mar 2019, 9:19 am
ஹைலைட்ஸ்:
- தற்போது அவர்கள் ஹோட்டலில் உள்ளதாகவும், ஆனால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் என வங்கதேச கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.