ஆப்நகரம்

வரலாற்றில் இன்று: யாரும் நெருங்க முடியாத சாதனையைப் படைத்த ரோஹித்…ரசிகர்கள் கொண்டாட்டம்!

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா மெகா சாதனை படைத்து அசத்தினார்.

Samayam Tamil 6 Jul 2021, 6:15 pm
2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா, இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டார். மொத்தம் 8 போட்டிகளில் பங்கேற்ற இவர், 5 சதங்களை விளாசி, ஒரு உலகக் கோப்பையில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். அதற்குமுன் இலங்கையை சேர்ந்த குமார் சங்கக்காரா, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் 4 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
Samayam Tamil ரோஹித் ஷர்மா


2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா முதல் நான்கு சதங்களைத் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக அடித்திருந்தார். அடுத்து ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா, இலங்கைக்கு எதிராக விளையாடியபோது சதம் அடித்து அசத்தினார்.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி மொத்தம் 267 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 113 ரன்கள் சேர்த்தார். அடுத்தபடியாக, லகிரு திரிமன்னே 53 ரன்கள் அடித்திருந்தார்.

இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா இருவரும் சிறப்பாக விளையாடி, இலங்கை பந்துவீச்சைத் தெறிக்கவிட்டனர். இந்த பார்ட்னர்ஷிப் 189 ரன்கள் குவித்தது. ரோஹித் ஷர்மா 94 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 103 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் கே.எல்.ராகுல் 111 ரன்கள் சேர்த்தார். இதனால், இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

அந்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா 4 சதங்கள் விளாசி, அதிக சதங்கள் அடித்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த சாதனையைத் தகர்ப்பது கடினம் என அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு, இச்சாதனையைக் கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்