ஆப்நகரம்

வரலாற்றில் இன்று: ஒருநாள் கிரிக்கெட்டில் தகர்க்க முடியாத சாதனை: சச்சின் வரலாறு படைத்த தினம்!

ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் வரலாற்றுச் சாதனை படைத்த தினம் இன்று.

Samayam Tamil 29 Jun 2021, 3:40 pm
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 14 வருடங்களுக்கு முன்பு, இதே தினத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்து அசத்தினார்.
Samayam Tamil சச்சின் டெண்டுல்கர்


2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்றது. இதில் இரண்டாவது போட்டியில் 227 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடி 106 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து 93 ரன்கள் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

இறுதியில் 32ஆவது ஓவரில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள்.

1989ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி சச்சின், இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகமானார். அதே ஆண்டில் டிசம்பர் 18ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட்டிலும் தடம் பதித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய சச்சின் மொத்தம் 51 சதங்கள் விளாசி, 15,921 ரன்கள் குவித்தார். இன்றுவரை இந்த சாதனையை யாராலும் நெருங்க முடியவில்லை. அதேபோல், ஒருநாள் கிரிக்கெட்டிலும் அற்புதமாகச் செயல்பட்டு 49 சதங்களுடன் 18,426 ரன்கள் அடித்துள்ளார். இச்சாதனையும் இன்றுவரை தகர்க்கப்படாமல் இருக்கிறது. தகர்க்க வாய்ப்பே இல்லை என்றும் சில கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

சச்சின் இந்திய அணிக்காக 6 உலகக் கோப்பையில் களமிறங்கியிருக்கிறார். இதில் கடைசி உலகக் கோப்பையில்தான் (2011) இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்