ஆப்நகரம்

கோலி திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட அந்த இரண்டு வீரர்கள் யார் தெரியுமா?

திருமணம் முடியும் வரை கோலி - அனுஷ்கா சர்மாவின் திருமண தேதியை யாருக்கும் அறிவிக்காமல் அமைதி காப்பது என முடிவெடுத்துவிட்டனர் போலும்.

TOI Sports 9 Dec 2017, 3:25 pm
திருமணம் முடியும் வரை கோலி - அனுஷ்கா சர்மாவின் திருமண தேதியை யாருக்கும் அறிவிக்காமல் அமைதி காப்பது என முடிவெடுத்துவிட்டனர் போலும். அதன் காரணமாக சொந்த காரணங்களுக்காக என்று கோலி டிசம்பர் மாதம் பிசிசிஐ.,யிடம் விடுமுறை கேட்டிருந்தார்.
Samayam Tamil only two cricketers invited for virat anushkas wedding
கோலி திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட அந்த இரண்டு வீரர்கள் யார் தெரியுமா?


இந்நிலையில் அவர்களின் திருமணம் 9,10,11 தேதிகளில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடக்கவுள்ளதான தகவல் வெளியானது ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் அவர்களின் திருமணம் 12ம் தேதி நடக்கலாம் அல்லது வேறு தேதிகளில் நடக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

கோலி அழைப்பு விடுத்த அந்த ஜாம்பவான்கள் :
ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கோலி - அனுஷ்கா திருமணம் மிகவும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் இவரின் திருமண விழாவில் பங்கேற்பார் என தெரிகிறது. அதே போல் கோலியின் மிக நெருங்கிய நண்பராக இருக்கும் யுவராஜ் சிங் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவர்களோடு கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பங்கேற்க வாய்ப்புள்ளதாக் தெரிகிறது.

பல சாதனைகளை செய்து உலகமே வியந்து பார்க்கும் கோலி, யாருக்கும் அறிவிக்காமல் தன் திருமணத்தை முடிக்க தயாராகி வருகின்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்