ஆப்நகரம்

நடுமைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தான் தேர்வு செய்யபடாததை கண்டித்து போட்டியின் நடுவே, நடு மைதானத்தில் கிரிக்கெட் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

TOI Sports 1 Oct 2017, 5:43 pm
லாகூர்: பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தான் தேர்வு செய்யபடாததை கண்டித்து போட்டியின் நடுவே, நடு மைதானத்தில் கிரிக்கெட் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil pak pacer tries to immolate self during match over rejection
நடுமைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற கிரிக்கெட் வீரர்!


பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது. இதை லாகூர் நகர கிரிக்கெட் அசோசியேசன் தலைமையேற்று நடத்திவருகிறது. இந்நிலையில் இதன் போட்டியின் மத்தியில், ஒருவர் கேனுடன் மைதானத்தின் மத்தியை நோக்கி ஓடியுள்ளார்.

இதைப்பார்த்து சந்தேகமடைந்த ரசிகர்கள், மைதான அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், அவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொள்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அவரை தடுத்த அதிகாரிகள் விசாரித்த போது, போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காததால் இப்படி செய்ததாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அந்த நபர் கூறுகையில்.’ நான் கிளப் மற்றும் ஜோனல் அளவில் சிறப்பாக பவுலிங் செய்தேன். ஆனால் தேர்வுக்குழுவினர் என்னை வேண்டும் என்றே தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். ஆனால் லாகூர் அணிக்காக நான் விளையாட வேண்டும் என்றால் பணம் கேட்டனர். அதனால் தான் இந்த முடிவுக்கு வந்தேன்.’ என்றார்.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக உறுதியளித்து அவரை அங்கிருந்து அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


LAHORE: Fed up with constant selection rejections, a young cricketer in Pakistan tried to immolate himself during a first-class match at a stadium here, accusing selectors of demanding bribe to give him a chance.

அடுத்த செய்தி

டிரெண்டிங்