பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டி நடைபெற்று கராச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்:
சமீபத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்ததால், நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயதில் இருக்கிறார்கள்.
இதனால், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா சபீக், இமாம் உல் ஹக் ஆகிய ஓபனர்கள் நிதானமாக விளையாடி ரன்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
ஓபனர் அப்துல்லா சபீக் 7 (14) டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதைப் போல, ஸ்பின்னர் அஜாஸ் படேலுக்கு எதிராக இறங்கி விளையாட முற்பட்டு ஸ்டெம்பிட் ஆனார். இதனைத் தொடர்ந்து ஒன் டவுன் பேட்டர் ஷான் மசூத் களத்திற்குள் வந்தார். சரி, இவராவது இமாம் உல் ஹக்குடன் நீண்ட பார்ட்னர்ஷிப் அமைப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் ப்ரேஸ்வெல் பந்தில் ஸ்டெம்பிட் ஆகி நடையைக் கட்டினார். மசூர் 3 (10) ரன்களை மட்டும்தான் சேர்த்தார்.
தற்போது இமாம் உல் ஹக் 12 (26), பாபர் அசாம் 5 (18) ஆகியோர் விளையாடி வருகிறார்கள். பாகிஸ்தான் அணி 28/2 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
155 வருடத்தில் முதல்முறை:
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1877 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த அணியின் முதல் இரண்டு விக்கெட்களும் ஸ்டெம்பிட் ஆனதே கிடையாது. தற்போது, முதல்முறையாக பாகிஸ்தான் அணி இந்த வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது.
போட்டிகள் விபரம்:
பாகிஸ்தான், நியூசிலாந்து இடையில் தற்போது முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. அடுத்து, இரண்டாவது டெஸ்ட் ஜனவரி 2ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறும். தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 9, 11, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முதல் போட்டி நடைபெற்று கராச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்:
சமீபத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்ததால், நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயதில் இருக்கிறார்கள்.
இதனால், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா சபீக், இமாம் உல் ஹக் ஆகிய ஓபனர்கள் நிதானமாக விளையாடி ரன்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
ஓபனர் அப்துல்லா சபீக் 7 (14) டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதைப் போல, ஸ்பின்னர் அஜாஸ் படேலுக்கு எதிராக இறங்கி விளையாட முற்பட்டு ஸ்டெம்பிட் ஆனார். இதனைத் தொடர்ந்து ஒன் டவுன் பேட்டர் ஷான் மசூத் களத்திற்குள் வந்தார். சரி, இவராவது இமாம் உல் ஹக்குடன் நீண்ட பார்ட்னர்ஷிப் அமைப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் ப்ரேஸ்வெல் பந்தில் ஸ்டெம்பிட் ஆகி நடையைக் கட்டினார். மசூர் 3 (10) ரன்களை மட்டும்தான் சேர்த்தார்.
தற்போது இமாம் உல் ஹக் 12 (26), பாபர் அசாம் 5 (18) ஆகியோர் விளையாடி வருகிறார்கள். பாகிஸ்தான் அணி 28/2 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
155 வருடத்தில் முதல்முறை:
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1877 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த அணியின் முதல் இரண்டு விக்கெட்களும் ஸ்டெம்பிட் ஆனதே கிடையாது. தற்போது, முதல்முறையாக பாகிஸ்தான் அணி இந்த வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது.
போட்டிகள் விபரம்:
பாகிஸ்தான், நியூசிலாந்து இடையில் தற்போது முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. அடுத்து, இரண்டாவது டெஸ்ட் ஜனவரி 2ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறும். தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 9, 11, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.