ஆப்நகரம்

பதிலடி கொடுத்த பாகிஸ்தான்: மண்ணை கவ்விய நியூசி.,!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி, 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Samayam Tamil 25 Jan 2018, 3:36 pm
ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி, 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Samayam Tamil pakistan beat blackcaps by 48 runs to level series 1 1 and end their 13 match losing streak against the hosts
பதிலடி கொடுத்த பாகிஸ்தான்: மண்ணை கவ்விய நியூசி.,!


நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியி நியூசிலாந்து வென்றது. இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

அசத்தல் துவக்கம்:
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (50), அஹமது செஷாத் (44) மிரட்டலான துவக்கம் அளித்தனர். பின் வந்த பாபர் அசாம் (50*), சர்ப்ராஜ் (41) கைகொடுக்க, பாகிஸ்தான் அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது.

முன்ரோ ஏமாற்றம்:
கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு வழக்கமாக கைகொடுக்கும் முன்ரோ (1) இம்முறை ஏமாற்றினார். கப்டில் (26) கேப்டன் வில்லியம்சன் (0) ஏமாற்றினர். பின் வரிசை வீரர்களும் சொதப்ப, நியூசிலாந்து அணி 18.3 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டனது.

இதையடுத்து பாகிஸ்தான் அணி, 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-1 என சமன் செய்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்