ஆப்நகரம்

இனி ஃபிட்டா இல்லேன்னே சம்பளம் ‘கட்’... வீரர்களுக்கு ஆப்பு வைக்கும் பாக்!

லாகூர்: இனி குறைந்தபட்ச உடற்தகுதியில் இல்லாத வீரர்களுக்கு அவர் அந்த நிலையை எட்டும் வரை சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமாக பிடித்தம் செய்யப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

Samayam Tamil 3 Jan 2020, 7:54 pm
பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வு வரும் 6, 7 ஆம் தேதிகளில் நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பிசிபி) அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் இரண்டு நாட்கள் நடக்கும் உடற்தகுதி சோதனையில் பங்கேற்க வேண்டும்.
Samayam Tamil Pakistan


விதிவிலக்கு
வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷதாப் கான் ஆகியோர் வங்கதேச பிரீமியர் லீக்கில் பங்கேற்பதால் அவர்களுக்கு வரும் 20, 21 தேதிகளில் சோதனை நடத்தப்படும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச உடற்குதியை எட்டாத வீரர்களுக்கு இனி அவர் அந்த உடற்தகுதியை எட்டும் வரை மாதம் மாதம் 15 சதவீதம் அவரி சம்பளத்தில் இருந்து அபராதமாக பிடித்தம் செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறு கூட்டமைப்பு அணிகள்
இந்த உடற்தகுதி தேர்வு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கீழ் உள்ள 6 கூட்டமைப்பில் உள்ள அணி வீரர்களுக்கும் இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்பாக அனைத்து வீரர்களுக்கும் ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்