ஆப்நகரம்

மீண்டும் இந்தியா-பாக்., மோதல்?: சூடு பிடித்த சாம்பியன்ஸ் டிராபி!

சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதியில், இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, பைனலுக்குள் நுழைந்தது. இதனால், பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

TOI Sports 14 Jun 2017, 10:02 pm
கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதியில், இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, பைனலுக்குள் நுழைந்தது. இதனால், பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil pakistan ready to meet arch riaval india in final
மீண்டும் இந்தியா-பாக்., மோதல்?: சூடு பிடித்த சாம்பியன்ஸ் டிராபி!


இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

கார்டிப்பில் நடந்த முதல் அரையிறுதியில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது. பர்மிங்ஹாமில் நாளை நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.

இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், லண்டனில் வரும் 18ல் நடக்கும் பைனலில் மீண்டும் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும். இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணியை வங்கதேசம் வீழ்த்த வாய்ப்பு குறைவு என்பதால், தற்போதே, ரசிகர்கள் மத்தியில் பைனலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்