பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் துவங்கியுள்ள முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ராவல்பிண்டி மைதானத்தில் பௌலர்களால் சிறிய தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியாது எனக் கணிக்கப்பட்டிருந்தது. மேலும், இப்போட்டி துவங்குவதற்கு முன் பேட்டிகொடுத்த இங்கிலாந்து அணிக் கேப்டன் ஜாஸ் பட்லர், ‘‘டெஸ்டில் அதிரடி காட்டுவது மட்டும்தான் எங்களது ஒரே திட்டம்’’ என அதிரடியாக அறிவித்திருந்தார். இறுதியில், அதேபோல்தான் நடந்தது.
இங்கிலாந்து இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் ஜாக் கிரௌலி, டக்கர் இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். இதனால், 14 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 100 ரன்களை கடந்து மெகா சாதனையை படைத்தது.
இதனைத் தொடர்ந்து கிரௌலி 122 (111), டக்கர் 107 (110) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும், அடித்து ஒல்லி போப் 108 (104), ஹாரி ப்ரூக் 101 (81) ஆகியோர் மிரட்டலாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்கள். ரூட் 23 (31) மட்டும்தான் அந்த அணியில் சிறப்பாக செயல்படவில்லை.
மெகா சாதனை:
தற்போது ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் 34 (15) இருவரும் களத்தில் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டத்தில் 506/4 ரன்களை குவித்து, முதல்நாளில் 500 ரன்களை தொட்ட முதல் டெஸ்ட் அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இங்கிலாந்து இலக்கு:
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இன்னமும் லிவிங்ஸ்டன், வில் ஜாக்ஸ், ஜாக் லீச், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் வெளியே இருக்கிறார்கள். இதில் ஆண்டர்சனை தவிர அனைவரும் பேட்டிங் செய்யக் கூடியவர்கள். இதனால், இன்றும் இங்கிலாந்து அதிரடியை காட்டும் பட்சத்தில், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 1000 ரன்களை தொட்டு வரலாற்று சாதனையை படைக்கும் எனக் கருதப்படுகிறது.
இங்கிலாந்து ரசிகர்களும், இங்கிலாந்து அணி 1000 ரன்களை அடிக்க வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால், இரண்டாவது நாள் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராவல்பிண்டி மைதானத்தில் பௌலர்களால் சிறிய தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியாது எனக் கணிக்கப்பட்டிருந்தது. மேலும், இப்போட்டி துவங்குவதற்கு முன் பேட்டிகொடுத்த இங்கிலாந்து அணிக் கேப்டன் ஜாஸ் பட்லர், ‘‘டெஸ்டில் அதிரடி காட்டுவது மட்டும்தான் எங்களது ஒரே திட்டம்’’ என அதிரடியாக அறிவித்திருந்தார். இறுதியில், அதேபோல்தான் நடந்தது.
இங்கிலாந்து இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் ஜாக் கிரௌலி, டக்கர் இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்கள். இதனால், 14 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 100 ரன்களை கடந்து மெகா சாதனையை படைத்தது.
இதனைத் தொடர்ந்து கிரௌலி 122 (111), டக்கர் 107 (110) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும், அடித்து ஒல்லி போப் 108 (104), ஹாரி ப்ரூக் 101 (81) ஆகியோர் மிரட்டலாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்கள். ரூட் 23 (31) மட்டும்தான் அந்த அணியில் சிறப்பாக செயல்படவில்லை.
மெகா சாதனை:
தற்போது ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் 34 (15) இருவரும் களத்தில் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டத்தில் 506/4 ரன்களை குவித்து, முதல்நாளில் 500 ரன்களை தொட்ட முதல் டெஸ்ட் அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இங்கிலாந்து இலக்கு:
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இன்னமும் லிவிங்ஸ்டன், வில் ஜாக்ஸ், ஜாக் லீச், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் வெளியே இருக்கிறார்கள். இதில் ஆண்டர்சனை தவிர அனைவரும் பேட்டிங் செய்யக் கூடியவர்கள். இதனால், இன்றும் இங்கிலாந்து அதிரடியை காட்டும் பட்சத்தில், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 1000 ரன்களை தொட்டு வரலாற்று சாதனையை படைக்கும் எனக் கருதப்படுகிறது.
இங்கிலாந்து ரசிகர்களும், இங்கிலாந்து அணி 1000 ரன்களை அடிக்க வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால், இரண்டாவது நாள் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.