இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாகத் தாமதமாகத் தொடங்கியது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துத் திணறிய பாகிஸ்தான், விக்கெட் கீப்பர் முகமது ரிஷ்வான் அரை சதத்தால் 223/9 எனக் கௌரவமான ஸ்கோரை எட்டியுள்ளது.
முதல்நாள் ஆட்டத்தை போல, இன்றும் மழையின் குறுக்கீடு அதிகமாகவே இருந்தது. இரண்டு நாட்களில் 86 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. கடைசி செசனில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
126/5 என பாகிஸ்தான் இருந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. பாபர் அசாம், முகமது ரிஷ்வான் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஸ்டூவர்ட் பிராடின் துல்லியமான பந்து வீச்சில் பாபர் அசாம் 47 ரன்களுக்கு அவுட் ஆனார்.
England vs Pakistan: மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய 2ஆம் நாள் ஆட்டம்!
அடுத்துக் களமிறங்கிய யஷிர் ஷா, ஷாஹின் அஃப்ரிதி, முகமது அப்பாஸ் அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இருப்பினும் மறுமுனையில் விக்கெட் கீப்பர் முகமது ரிஷ்வான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் வேகத்தில் மிரட்டினாலும் முகமது ரிஷ்வான் (60 ரன்கள்) அசராமல் நிலைத்து விளையாடி அரை சதம் கடந்தார். 10 ஆண்டுகளுக்குப் பின்பு, பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஓருவர் இங்கிலாந்து மண்ணில் அரைசதம் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, 2010ல் ஜுல்கர்னைன் ஹைதர் என்பவர் அரைசதம் கடந்திருந்தார்.
பாகிஸ்தான் அணி தற்போது வரை 223/9 என உள்ளது. 240 அல்லது 250 ரன்களை எடுக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்குத் தலைவலியாய் அமையும்.
இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்து வீசினர். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் கூட்டணி வேகத்தில் மிரட்டியது. இருவரும் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். சாம் கரன், கிறிஸ் ஓக்ஸ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.
கெத்து காட்டும் இங்கிலாந்து பௌலர்கள்... தடுமாறும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்!!
சௌதம்டன் மைதானத்தில், அடுத்த மூன்று நாட்களும் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், அடுத்துக் களமிறங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு கடும் சவால்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.
முதல்நாள் ஆட்டத்தில் 46 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் 40 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அடுத்துவரும் நாட்களில் வானிலை சரியாக அமையும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 98 ஓவர்கள் வீசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நாள் ஆட்டத்தை போல, இன்றும் மழையின் குறுக்கீடு அதிகமாகவே இருந்தது. இரண்டு நாட்களில் 86 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. கடைசி செசனில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
126/5 என பாகிஸ்தான் இருந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. பாபர் அசாம், முகமது ரிஷ்வான் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஸ்டூவர்ட் பிராடின் துல்லியமான பந்து வீச்சில் பாபர் அசாம் 47 ரன்களுக்கு அவுட் ஆனார்.
England vs Pakistan: மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய 2ஆம் நாள் ஆட்டம்!
அடுத்துக் களமிறங்கிய யஷிர் ஷா, ஷாஹின் அஃப்ரிதி, முகமது அப்பாஸ் அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இருப்பினும் மறுமுனையில் விக்கெட் கீப்பர் முகமது ரிஷ்வான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் வேகத்தில் மிரட்டினாலும் முகமது ரிஷ்வான் (60 ரன்கள்) அசராமல் நிலைத்து விளையாடி அரை சதம் கடந்தார். 10 ஆண்டுகளுக்குப் பின்பு, பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஓருவர் இங்கிலாந்து மண்ணில் அரைசதம் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, 2010ல் ஜுல்கர்னைன் ஹைதர் என்பவர் அரைசதம் கடந்திருந்தார்.
பாகிஸ்தான் அணி தற்போது வரை 223/9 என உள்ளது. 240 அல்லது 250 ரன்களை எடுக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்குத் தலைவலியாய் அமையும்.
இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்து வீசினர். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் கூட்டணி வேகத்தில் மிரட்டியது. இருவரும் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். சாம் கரன், கிறிஸ் ஓக்ஸ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.
கெத்து காட்டும் இங்கிலாந்து பௌலர்கள்... தடுமாறும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்!!
சௌதம்டன் மைதானத்தில், அடுத்த மூன்று நாட்களும் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், அடுத்துக் களமிறங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு கடும் சவால்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.
முதல்நாள் ஆட்டத்தில் 46 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் 40 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அடுத்துவரும் நாட்களில் வானிலை சரியாக அமையும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 98 ஓவர்கள் வீசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.