ஆப்நகரம்

ஊக்கமருந்து விவகாரம்: பாக்., வீரருக்கு 4 மாதங்கள் தடை

வரும் நவம்பர் 11ம் தேதி வரை அகமது செஷாத் எந்த கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாது.

Samayam Tamil 6 Oct 2018, 5:22 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் வீரர் அகமது செஷாத் 4 மாத காலம் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
Samayam Tamil 56c1dbf1bed40


தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் தோல்வி அடைந்ததால் அவர் ஊக்கமருத்து எடுத்துக்கொண்டது உறுதியானது.

இதனையடுத்து அவர் 4 மாத காலம் விளையாட தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதன் காரணமாக வரும் நவம்பர் 11ம் தேதி வரை அவரால் எந்த கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாது.
கடந்த ஜூலை 10ஆம் தேதி ஊக்கமருத்து சோதனைக்காக அவரிடமிரிந்து பெற்ற மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட மருந்துகள் உள்ளது என தெரியவந்தது. இதனால் அன்றிலிருந்து 4 மாத தடை தொடங்குவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருக்கிறது.

கடைசியாக ஜூன் மாதம் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் செஷாத் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்