ஆப்நகரம்

சின்ன கபில் தேவ் என நிரூபித்த பலே பாண்டியா!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், 2 விக்கெட் கைப்பற்றிய இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஜாம்பவான் கபில் தேவ், ரவிசாஸ்திரி, மனோஜ் பிரபாகர் பட்டியலில் இணைந்தார்.

TOI Sports 24 Dec 2017, 10:08 pm
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், 2 விக்கெட் கைப்பற்றிய இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஜாம்பவான் கபில் தேவ், ரவிசாஸ்திரி, மனோஜ் பிரபாகர் பட்டியலில் இணைந்தார்.
Samayam Tamil pandya joins special club with kapil shastri and prabhakar
சின்ன கபில் தேவ் என நிரூபித்த பலே பாண்டியா!


இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி மும்பையில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, வழக்கம் போல பேட்டிங்கில் சொதப்ப அந்த அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதன் மூலம் ஒரே ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 800 ரன்கள் மற்றும் 40 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் கபில் தேவ் (1982, 1983, 1986), ரவி சாஸ்திரி (1983), மனோஜ் பிரபாகர் (1993) ஆகியோருடன் பாண்டியா இணைந்தார்.

During the match played between India and Sri Lanka at the Wankhede Stadium, Hardik Pandya got into a special club entry.

அடுத்த செய்தி

டிரெண்டிங்