ஆப்நகரம்

இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் தந்த பார்த்திவ் பட்டேல்

மொஹாலி: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்தது 283 ரன்கள் எடுத்துள்ளனர்.

TOI Sports 27 Nov 2016, 12:50 pm
மொஹாலி: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்தது 283 ரன்கள் எடுத்துள்ளனர்.
Samayam Tamil parthiv perishes after promising start
இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் தந்த பார்த்திவ் பட்டேல்


இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி, 246 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

நேற்று முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 269 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடத்தொடங்கிய இங்கிலாந்து கிரிட்டி பேட்டி 1 ரன்களில் சமியின் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். அவுட் ஆகாமல் இருந்த ஆண்டர்சன் 13 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் எடுத்தது.
இதை தொடர்ந்து விளையாட தொடங்கி இந்தியா பார்த்திவ் படேல், முரளி விஜய் நிதானமாக விளையாடினர்.

முரளி விஜய் 12 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து வந்த புஜாரா களமிறங்கினார். பார்த்தீவ் படேல் 38, புஜாரா 8 ரன்கள் எடுத்த நிலையில் முதல் உணவு இடைவேளை விடப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்